ராஜபாளையத்தைச் சேர்ந்த ராமராஜ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அதில், “எங்கள் ஊர் கொல்லம் - திருமங்கலம் பிரதான சாலை வழியாக, மதுரை போன்ற பல நகரங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் எங்கள் ஊரில் ஏராளமான பஞ்சு ஆலைகளும் உள்ளன. இந்த ஆலைகளுக்கு நூற்றுக்கணக்கான சுமையேற்றும் வாகனங்கள் நகருக்குள் வந்து செல்கின்றன.
எங்கள் ஊரில் ஆங்கிலேயர் காலத்தில் சாலைகள் அமைக்கப்பட்டிருந்தது. தற்பொழுது அந்த சாலைகளில் குடியிருப்புகளும், மக்கள் நெருக்கமும் அதிகமாகி உள்ளதால், சாலைகள் பயணிக்க ஏதுவானதாக இல்லை. இந்த சாலைகளின் ஓரத்தில் நடப்பட்டிருந்த 57 மின் கம்பங்களும், 4 உயர் மின்மாற்றிகளும், சாலையின் நடுவே போக்குவரத்திற்கு இடையூறாக இருந்து வருகிறது. இவை அனைத்தும், தற்போது மின் வாரியத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த மின் கம்பங்கள் சாலையோரத்தில் இருந்தது.