தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விளாச்சேரியில் புறகாவல் நிலையம் திறப்பு - குற்றச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளியா? - குற்றச் சம்பவங்களை தடுக்க மதுரை காவல்துறை நடவடிக்கை

மதுரை: தொடர் குற்றச் சம்பவங்களை தடுக்கும் விதமாக, விளாச்சேரி மெயின்ரோட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புறகாவல் நிலையத்தை சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையர் திறந்துவைத்தார்.

புதிதாக புறகாவல் நிலையம் - குற்றச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளியா?
புதிதாக புறகாவல் நிலையம் - குற்றச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளியா?

By

Published : Oct 24, 2020, 11:57 AM IST

மதுரை மாநகரில் கொலை, கொள்ளை வழிப்பறிச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இதை தடுக்கும் விதமாக மாநகர காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நகரின் முக்கிய சந்திப்புகளில் புறகாவல் நிலையங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, திருப்பரங்குன்றம் காவல்நிலையத்துக்குட்பட்ட பகுதியான விளாச்சேரி மெயின்ரோட்டில் கண்காணிப்பு கேமராவுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புறகாவல் நிலையத்தை மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையர் சிவபிரசாத் திறந்துவைத்தார்.

விளாச்சேரியில் புதிதாக புறகாவல் நிலையம் திறப்பு

விளாச்சேரி பகுதியில் தொடர் குற்றச் சம்பவங்கள் அரங்கேறி வருவதால் புதிதாக காவல்நிலையம் திறக்கப்பட்டிருப்பது அதற்கு முற்றுப்புள்ளியாக அமையும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: திருடிய ஆட்டை, ஆட்டின் உரிமையாளர் தம்பியிடமே விற்ற பலே இளைஞர் கைது!

ABOUT THE AUTHOR

...view details