மதுரை: திருச்சியைச் சேர்ந்த கண்ணையன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், "திருச்சி மலைக்கோட்டைப் பகுதியில் சுமார் 500 நாய்கள் சுற்றித் திரிகின்றன. சில நேரங்களில் தெரு நாய்கள் கடிக்கவும் செய்கின்றன.
தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடாத காரணத்தால், அவற்றால் கடிக்கப்படும், பொதுமக்கள் ரேபிஸ் நோய்க்கு ஆளாகின்றனர். தெரு நாய்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி அலுவலர்களுக்குப் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, கண்காணிப்புக்குழுவின்கீழ், தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தவும், கருத்தடை செய்யவும் தெரு நாய்களுக்குத் தேவையான தங்குமிடம் குடிநீர் மற்றும் உணவு வசதிகளை செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.