தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆதீனம் ஆன்மீக மடமா? இல்லை வியாபார நிறுவனமா? - நீதிபதிகள் கேள்வி - madurai highcourt judges

மதுரை ஆதீனத்தின் நிலங்கள் ஒத்திக்கு விடப்பட்டது குறித்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆதீன மடங்கள், மடங்களாக செயல்படுகிறதா? இல்லை வியாபார நிறுவனங்களாக செயல்படுகிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆதீனம் ஆன்மீக மடமா
ஆதீனம் ஆன்மீக மடமா

By

Published : Oct 18, 2022, 10:46 PM IST

மதுரை ஆதீன மடம் மிகவும் பழமையான மடமாக இருந்து வருகிறது இந்த மடத்திற்கு சொந்தமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சொத்துக்கள் உள்ளது.

இந்நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு அப்போது இருந்த மதுரை ஆதீனம் தரப்பில் சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் தாலுகாவில் உள்ள 1,191 ஏக்கர் நிலங்களை பாண்டிச்சேரியைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களுக்கு 99 வருட ஒத்திக்கு பவர் செய்யப்பட்டுள்ளது, இதை வைத்து 2018ஆம் ஆண்டு பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது சட்டவிரோதமானது எனவே சட்ட விரோதமாக பதியப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது ஆதீன மட சொத்துக்கள் தனியாருக்கு ஒத்திக்கு விடப்பட்ட ஆவணங்களை பார்த்த நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்து, ஆதீன மடங்கள் மடங்களாக செயல்படுகிறதா? இல்லை வியாபார நிறுவனங்களாக செயல்படுகிறதா? என்று கேள்வி எழுப்பினர். இது போன்று ஒத்திக்கு விடுவதற்கு எந்த சட்டம் அனுமதிக்கிறது ஆதீன மடங்கள் அனைத்துமே இந்து அறநிலைத்துறைக்கு கட்டுப்பட்டது.

இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க இந்து அறநிலைய துறைக்கு அதிகாரம் உள்ளது, என்றும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் குழு அமைத்து விசாரணை செய்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், அந்த நிலங்களில் சட்டவிரோதமாக மணல் ஏதும் அல்லபட்டு வந்தால் உடனடியாக நிறுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணை 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க:பில்லி, சூனியத்திற்கு எதிராக சட்டம் - கேரள அரசு

ABOUT THE AUTHOR

...view details