தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மருத்துவ அறிக்கை பொய் கூறாது... பலாத்கார வழக்கில் தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம்.. - School Student sexually assaulted in Thanjavur

போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி தான் பலாத்காரம் செய்யப்படவில்லை என மறுத்த போதும், மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் இரட்டை ஆயுள் தண்டனையை உறுதி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 17, 2022, 5:02 PM IST

Updated : Oct 17, 2022, 9:47 PM IST

மதுரை:டியூஷன் சென்ற மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் இருவருக்கு தஞ்சாவூர் கீழமை நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது. இந்த தண்டனையை ரத்து செய்ய கோரி இளவரசன், கார்த்திக் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை இன்று (அக்.17) விசாரித்த நீதிபதிகள் நிஷாபானு, ஆனந்த வெங்கடேஷ் வழங்கிய உத்தரவில், டியூஷன் படிக்கச் சென்ற மாணவியை கடத்தி 6 நபர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுத்தி உள்ளனர். ஆனால், பாதிக்கப்பட்ட மாணவி தனக்கு எந்த பாலியல் துன்புறுத்தலும் நடைபெறவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால், விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவரிடம் அளித்த வாக்குமூலம், மருத்துவ சோதனை ஆகியவற்றின் மூலம் மாணவி பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் பொய் கூறலாம். ஆனால், மருத்துவர் அறிக்கைகள் பொய்யாக இருக்காது.

பொதுவாக போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகள், சாட்சியங்கள் ஆகியோர் சமுதாயத்திற்கும், குற்றவாளிகளுக்கு பயந்து சாட்சி சொல்வதற்கு முன் வருவதில்லை. அதுபோன்ற வழக்குகளில் இதுவும் ஒன்று. பாதிக்கப்பட்ட மாணவியின் மருத்துவ அறிக்கையில் இளவரசன் மற்றும் கார்த்திக் ஆகியோரின் டி.என்.ஏ உறுதி செய்யப்பட்டதால் அவர்களுக்கு தஞ்சாவூர் கீழமை நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.

எனவே, இந்த வழக்கில் தஞ்சாவூர் கிழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. என கூறி வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் டியூசன் ஆசிரியர் உள்பட இருவருக்கு ஆயுள் தண்டனை

Last Updated : Oct 17, 2022, 9:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details