மதுரை:வீரமரணமடைந்த இராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பயணித்த காரின் மீது செருப்புகளை வீசியவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்த சென்ற அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சென்ற கார் மீது பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் செருப்பு வீசிய சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிலரைக் கைது செய்தனர். சிலர் தப்பி ஓடி தலைமறைவாகினர்.
இந்த வழக்கில் மதுரை விளாங்குடி வேங்கைமாறன், மேல அனுப்பானடி மணிகண்டன், மானகிரி கோகுல் அஜித் ஆகிய 3 பேரும் இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனக்கோரி மனு தாக்கல் செதிருந்தனர்.