ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ் தட்டச்சு இயந்திரத் தந்தை யாழ்ப்பாணம் ஆர்.முத்தையாவின் 136ஆவது பிறந்த தினம் - சிறப்புத்தொகுப்பு! - தமிழ் தட்டச்சு இயந்திரம்

தமிழ் தட்டச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்ததுடன், அதன் பல்வேறு தொழில்நுட்பங்களுக்குச் சொந்தக்காரராகத் திகழ்ந்த யாழ்ப்பாணம் ஆர்.முத்தையாவின் பிறந்த தினம் இன்று. கணினி யுகமாக காலச்சூழல் இன்று மாறினாலும், தட்டச்சுக் கல்வியே இதற்கு அடிப்படை என்பதை யாரும் மறுக்கமுடியாது, அது குறித்த ஒரு பார்வை..!

தமிழ் தட்டச்சு இயந்திரம்
தமிழ் தட்டச்சு இயந்திரம்
author img

By

Published : Feb 24, 2022, 8:14 PM IST

மதுரை:தமிழ் தட்டச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்ததுடன், அதன் பல்வேறு தொழில்நுட்பங்களுக்குச் சொந்தக்காரராகத் திகழ்ந்த யாழ்ப்பாணம் ஆர்.முத்தையாவின் பிறந்த தினம் இன்று. கணினி யுகமாக காலச்சூழல் இன்று மாறினாலும், தட்டச்சுக் கல்வியே இதற்கு அடிப்படை என்பதை யாரும் மறுக்கமுடியாது.

அது குறித்த ஒரு பார்வைக்கவிஞர் தாராபாரதியின் 'வெறுங்கை என்பது மூடத்தனம்... உன் விரல்கள் பத்தும் மூலதனம்' என்ற வரிகளுக்கு முழு முதல் பொருத்தமானது, தட்டச்சுக் கல்வியே. விரைவான எழுத்து முறையின் அடிப்படையில் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட தட்டச்சு இயந்திரம் கடந்த 1867ஆம் ஆண்டு கிறிஸ்டோபர் எல் ஷோல்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

அவருக்கும் முன்பு பல்வேறு நபர்கள் தட்டச்சு இயந்திரங்களை உருவாக்க முயன்றாலும், முழுமையான வடிவத்தைக் கண்டறிந்தவர், கிறிஸ்டோபரே. உலகின் பல பகுதிகளைக் கைப்பற்றி ஆங்கிலேயர்கள் கோலோச்சிய காலத்தில் அவர்களின் எழுத்துப்பணிகளுக்கு தட்டச்சுப் பொறிகளே பெரும் பங்காற்றின.

தமிழ் தட்டச்சு இயந்திரம்

இந்நிலையில், தமிழ்மொழிக்கென்று தட்டச்சு பொறியை உருவாக்கும் சிந்தனை, இலங்கை யாழ்ப்பாணத்திலுள்ள சுண்டிக்குளியில் கடந்த 1886ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் நாள் பிறந்த ஆர்.முத்தையாவுக்கும் உதித்தது.

கணினி தவிர்க்க இயலாத ஒன்று

தமிழ் எழுத்துக்கள் அனைத்தையும் தட்டச்சு இயந்திரத்தில் உள்ள நான்கு வரிசைகளில், 46 விசைகளுக்குள் கொண்டுவருவதைச் சவாலாக ஏற்று, புதிய இயந்திரத்தை உருவாக்கினார். நகர்கின்ற விசைகளோடு, கொம்பு எழுத்துக்கள், சுழி எழுத்துக்கள் ஆகியவற்றிற்காக 'நகரா விசை' தொழில்நுட்பத்தைக் கண்டறிந்து, சாதனை படைத்தார்.

இதன்பிறகே பல்வேறு மொழிகளைச் சார்ந்தோர், தங்கள் மொழிக்கென்று தட்டச்சு இயந்திரங்களை உருவாக்கத் தொடங்கினர். தான் உருவாக்கிய தமிழ் தட்டச்சு இயந்திரத்தைப் பல்வேறு காலகட்டங்களில் செம்மைப்படுத்தினார். தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு தட்டச்சு தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்தினார்.

இன்று எல்லோரும் கணினியில் வேலை செய்தாலும்கூட, அடிப்படையான தட்டச்சுமுறை, தட்டச்சு இயந்திரங்களிலிருந்துதான் பெறப்பட்டது.

மதுரை மாவட்ட தட்டச்சு வணிகவியல் பயிற்சிப் பள்ளிகளின் சங்கச் செயலாளரும், நாகமலை கனி ஸ்கூல் ஆஃப் காமர்ஸ் தட்டச்சுப்பள்ளியின் முதல்வருமான கருணாகரன் கூறுகையில், 'தமிழ் தட்டச்சுப் பொறியின் தந்தையான யாழ்ப்பாணம் ஆர்.முத்தையாவின் பிறந்த தினம் இன்று.

இன்னும் ஆயிரமாண்டுகள் ஆனாலும் பயன்படக்கூடிய ஒரு தொழில்நுட்பத்தை உலகுக்கு அளித்தவர் முத்தையா. எத்தனையோ தொழில்நுட்பங்கள் வந்தாலும், தட்டச்சுப் பொறியை அடிப்படையாகக் கொண்டே அவை அனைத்தும் இயங்கி வருகின்றன. எலக்ட்ரானிக் பயன்பாடற்ற இந்த முறையையே உலக நாடுகள் அனைத்தும் பின்பற்றி வருகின்றன' என்கிறார்.

இன்றைக்குப் பல்வேறு துறைகளிலும் கணினி தவிர்க்க இயலாத இடத்தைப் பெற்றுள்ளது என்றாலும், அதன் மூல முதற்பொருளாய், ஆங்கில மற்றும் தமிழ் தட்டச்சுப் பொறிகளே இன்றளவும் திகழ்கின்றன.

இந்த நாளில் தமிழ் தட்டச்சுப் பொறியின் தந்தை யாழ்ப்பாணம் ஆர்.முத்தையாவை நினைவுகூர்வது தமிழர்களின் கடமையாகும்’ என்றார்.

இதையும் படிங்க:'ரீசார்ஜபிள் இ-பைக்' - மதுரை கல்லூரி மாணவரின் அசத்தல் உருவாக்கம்

ABOUT THE AUTHOR

...view details