தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சாலையோரத்தில் சடலங்களாக கிடந்த தந்தை, மகள்! - போலீசார் தீவிர விசாரணை! - madurai thoppur bridge

மதுரை: தோப்பூர் மேம்பாலம் அருகே சாலையோரத்தில் தந்தை, மகள் ஆகிய இருவரும் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

father-daughter suicides

By

Published : Jul 1, 2019, 9:12 PM IST

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே தோப்பூர் நான்கு வழிச்சாலையோர பள்ளத்தில் ஒரு சிறுமியும், 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும் இறந்து கிடந்தனர். உடலில் வெட்டுக்காயம் எதுவும் இல்லை. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் சோதனை மேற்கொண்டனர். உடல்களை கைபற்றி உடற்கூறு ஆய்விற்கு அனுப்பிவைத்தனர்.

ஆணின் அருகே கிடந்த பேக்கினை சோதனை செய்தபோது, ஓட்டுநர் உரிமம் இருந்தது. அதில் இருந்த தகவல் கொண்டு விசாரித்தபோது, அந்த நபர், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சேரன் நகரை சேர்ந்த வில்லியம்ஸ் மகன் கிங்ஸ்டன் பிரபாகரன்(41) என்பதும், அருகில் இறந்து கிடப்பது அவரது மகள் என்றும் தெரியவந்தது. இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்ததாக தெரிகிறது. ஓட்டுநர் உரிமத்தில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது, இணைப்பு கிடைக்கவில்லை.

பிரபாகரனின் மகள்

மேட்டுப்பாளையத்தைச் சேர்ந் கிங்ஸ்டன் பிரபாகரன், தனது மகளுடன் மதுரை பக்கத்தில் உள்ள இடத்தில் இறந்து கிடந்த காரணம் என்ன, இருவரையும் யாராவது கொலை செய்து விட்டு இங்கு வீசிவிட்டு சென்றார்களா, குடும்ப பிரச்னையால் தற்கொலை செய்து கொண்டார்களா உள்ளிட்ட கோணங்களில் ஆஸ்டின் பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details