தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த நாகராஜன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், "சங்கரன்கோவில் வழியாக திருநெல்வேலி செல்லும் பிரதான சாலையை ஒட்டி அருவம் சூடிய விநாயகர் கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலின் அருகே, சர்வே எண் 888/3-இல், 32 ஹெக்டேர் பரப்பளவில் மின் மயானம் அமைக்க, நகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த விநாயகர் கோயில் பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கற்கோயிலாகும்.
இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் இங்கு ஓய்வு எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த கோயிலை சுற்றிலும் 200 ஏக்கர் ஈரமான நஞ்சை நிலங்கள் உள்ளன.
இந்த நிலங்களில் நெல் சாகுபடி செய்யப்பட்டுவருகிறது. அத்துடன் கோயிலின் கட்டடத்தை ஒட்டிய நிலம் காலியாக இருப்பதால், அறுவடை காலத்தில் இந்த இடத்தை கிராம மக்கள் களஞ்சியமாக பயன்படுத்தி வருகின்றனர்.