திருவனந்தபுரம் கோட்டத்தில் வள்ளியூர் நாங்குநேரி ரயில் நிலையங்களுக்கிடையே இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. இதன் காரணமாக செப்டம்பர் 19 முதல் செப்டம்பர் 27 வரை தாம்பரத்திலிருந்து புறப்பட வேண்டிய தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா ரயில் (20691) மற்றும் செப்டம்பர் 20 முதல் செப்டம்பர் 28 வரை நாகர்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய நாகர்கோவில் தாம்பரம் அந்தியோதயா ரயில் (20692) ஆகியவை திருநெல்வேலி - நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.
இதே போல செப்டம்பர் 20 முதல் செப்டம்பர் 28 வரை திருச்சி - திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி ரயில்கள் (22627/22628) திருநெல்வேலி - திருவனந்தபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். மேலும் செப்டம்பர் 23 அன்று சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் வாராந்திர விரைவு ரயில் (12689) மற்றும் செப்டம்பர் 25 அன்று நாகர்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய நாகர்கோவில் - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வாராந்திர விரைவு ரயில் (12690) ஆகியவை திருநெல்வேலி நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.
செப்டம்பர் 25 அன்று புதுச்சேரியில் இருந்து புறப்பட வேண்டிய கன்னியாகுமரி வாராந்திர விரைவு ரயில் (16861) மற்றும் செப்டம்பர் 26 அன்று கன்னியாகுமரியில் இருந்து புறப்பட வேண்டிய புதுச்சேரி வாராந்திர விரைவு ரயில் (16862) ஆகியவை திருநெல்வேலி - கன்னியாகுமரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.