மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் இதுதொடர்பாக பேசியதாவது:
"திமுக தலைவர் ஸ்டாலின், கீழடி பகுதியை மிக சமீபத்தில் சென்று பார்வையிட்டு, தமிழருடைய வரலாற்று உணர்வைப் மிக பெருமிதத்துடன் பதிவு செய்தார்.
மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி கீழடி ஆராய்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியை எடுக்க வேண்டும்.
அவ்வாறு ஆரோக்கியமான நல்ல விஷயங்களை பாராட்டும் நபராக நான் இருப்பேன். அதைப்போல், தமிழர்களுடைய வரலாற்றுப் பெருமையை உலகிற்கு அறிவித்து கொண்டிருக்கின்ற கீழடி ஆராய்ச்சி அடுத்த கட்டத்திற்கு செல்வதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.