மதுரையில் நேற்று (பிப். 18) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் எழுச்சி மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
ஸ்டாலின் இல்லாத கம்யூனிச மாநாடா?
கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், "சோவியத் ஸ்டாலின் இல்லாமல் கம்யூனிச தத்துவம் எப்படி இருக்க முடியாதோ, அதேபோலதான் இந்த ஸ்டாலின் இல்லாமல் கம்யூனிஸ்ட் மாநாடு நடத்த முடியாது என்கிற உணர்வோடு என்னை அழைத்திருக்கிறார்கள். திராவிட கட்சி இல்லையெனில் கம்யூனிச கட்சியை ஏற்றுக்கொண்டிருப்பேன் என கருணாநிதி கூறியுள்ளார்" என்றார்.
மோடியின் மறுகரம் கார்ப்பரேட்
தொடர்ந்து பேசிய அவர், "அதிமுக மூலம் தமிழ்நாட்டில் காலூன்ற நினைக்கிறது பாஜக. தனது ஊழலை மறைக்க அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. மோடி ஓபிஎஸ்-ஈபிஎஸ் கையை உயர்த்தியுள்ளார். ஊழல் கரங்களை உயர்த்தி ஊழலுக்கு உதவி செய்வதை வெளிப்படுத்தியுள்ளார்.
மோடியின் ஒரு கரம் காவி; மறு கரம் கார்ப்பரேட்; அத்தோடு ஊழலையும் கரம் கோத்துள்ளார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சிதைத்த மோடி ஔவையார் பாடலை கூறலாமா?
பெட்ரோல், டீசல் விலை