மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குள்பட்ட கருக்கட்டான்பட்டியைச் சேர்ந்தவர் முருகன். அவர் உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ பா. நீதிபதியிடம் எலெக்ட்ரீசியனாகப் பணியாற்றிவந்தார். இந்த நிலையில் நேற்று (டிச. 15) முருகனின் தந்தை ராமர் உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில், "டிச. 15 எம்எல்ஏ வீட்டிற்கு சென்ற எனது மகன் முருகன், அவரது மனைவி சுமதி இருவரும் வீடு திரும்பவில்லை. அங்கு அவர்களை எம்எல்ஏவின் ஆள்கள் அடித்து துன்புறுத்துகின்றனர். அவர்களை மீட்டுத்தர வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
பின்னர் காவலர்கள் நடவடிக்கை எடுப்பதாக கூறிய நிலையில், வீடு திரும்பவில்லை எனக் கூறப்பட்ட முருகன்-சுமதி தம்பதியினர் சிறிது நேரத்தில் அதே காவல் நிலையத்திற்கு வந்தனர். அப்பேது, முருகன் காவலர்களிடம், "நேற்று ரூ.2 கோடி பணம் அடங்கி ஒரு பெட்டியை அடையாளம் தெரியாத நபர் என்னிடம் கொடுத்து, எம்எல்ஏ நீதிபதியிடம் கொடுக்கச் சொன்னார்.