மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலை கிராமத்தில் வசித்து வருபவர்தான் மாணவி சந்திரலேகா. மதுரையில் உள்ள திருமலை மன்னர் கல்லூரியில் சமூகவியல் துறையில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். சமூக சேவையில் ஆழ்ந்த ஈடுபாடும், நோக்கமும் கொண்ட சந்திரலேகா, அதன் காரணமாகவே இந்த படிப்பை தேர்ந்தெடுத்து படித்து வருகிறார்.
தற்போது கரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் அது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் பொருட்டு துணிச்சலாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார். இதுகுறித்து மாணவி சந்திரலேகா கூறியபோது, ”சேவை நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட காரணத்தால் எனது படிப்பையும் அந்தத் துறையிலேயே தேர்ந்தெடுத்தேன். தற்போது கரோனா வைரஸ் தொற்று பரவிவரும் நிலையில் அதுகுறித்த விழிப்புணர்வு எனது கிராமத்தில் உள்ள பொது மக்களிடம் இல்லை. ஆகையால் கை-கால் சுத்தம், சமூக இடைவெளி முகக் கவசம் அணிந்து வெளியே செல்லுதல், தனித்திருத்தல் ஆகியவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்.