தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ரமலான் திருநாளில் சிபிஎஸ்இ தேர்வுகளா? - தேதியை மாற்றக்கோரி சு. வெங்கடேசன் எம்பி கடிதம் - Madurai MP Venkatesan

மதுரை: ரமலான் திருநாளில் சிபிஎஸ்இ தேர்வுகள் நடைபெறும் சூழல் எழுந்திருப்பதை சுட்டிக்காட்டி தேர்வுத் தேதிகளை மாற்றுமாறு மத்திய கல்வித் துறை அமைச்சருக்கும், சிபிஎஸ்இ (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) இயக்குநருக்கும் சு. வெங்கடேசன் எம்பி கடிதம் எழுதியுள்ளார்.

சு. வெங்கடேசன் எம்.பி
சு. வெங்கடேசன் எம்.பி

By

Published : Feb 6, 2021, 12:05 PM IST

அந்தக் கடிதத்தில் மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கூறியிருப்பதாவது:

ரமலான் இஸ்லாமியர்களின் முக்கியமான திருநாள் ஆகும். இவ்வாண்டு தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் மே 14 அன்று ரமலான் விடுமுறை அறிவித்துள்ளன. ஆனால் ரமலான் திருநாள், பிறை தென்படுவதைப் பொறுத்து மாறும்.

ஆகவே ரமலான் திருநாள் தேதி ஒரு நாள் முன்னதாகவோ, பின்னதாகவோ மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது. இதைக் கணக்கிற் கொள்ளாமல் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்புத் தேர்வுகளை மே 13, 15ஆம் தேதிகளில் அறிவித்துள்ளது.

சு. வெங்கடேசன் எம்பி
ரமலான் தேதிகள் மாறுகிறபட்சத்தில் இஸ்லாமிய மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாவார்கள். மேலும், இஸ்லாமிய மாணவர்களை அவர்களுக்கு முக்கியமான திருநாள் அன்று தேர்வு எழுத நிர்ப்பந்திப்பது மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திற்கு அழகல்ல எனச் சுட்டிக் காட்ட விழைகிறேன். ஆகவே, அத்தகைய நெருக்கடி வராமலிருக்க இப்போதே தேர்வுத் தேதிகளை மாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details