மதுரை: பாஜக ஆதரவாளராகவும், தேசியவாதியாகவும் அறியப்படும் மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் மாநிலத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், மாநில அரசுக்கு எதிராகவும் பதிவிட்டதாக வழக்கறிஞர் ராமசுப்ரமணியன் என்பவர் சைபர் கிரைம் காவல் துறையில் புகார் அளித்தார்.
மேலும், மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுக்கவும் அதில் வலியுறுத்தியிருந்தார். இதன் தொடர்ச்சியாக, அவர் மீது நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வரும் 23ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.