சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடியில் தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக ஏழாம்கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. கீழடி அருகேயுள்ள கொந்தகை, அகரம், மணலூர் பகுதிகளில் இரண்டாம்கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
2014ஆம் ஆண்டு இந்திய தொல்லியல் துறையின் சார்பாகத் தொடங்கிய அகழாய்வுப் பணி, 2017ஆம் ஆண்டுமுதல் தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக நடைபெற்றுவருகின்றது. 2020ஆம் ஆண்டுமுதல் கொந்தகை, அகரம், மணலூர் பகுதிகளிலும் பணிகள் விரிவுபடுத்தப்பட்டன.
ஒவ்வொரு கட்ட அகழாய்வும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்துடன் நிறைவு செய்யப்படுவது வழக்கம். ஏனென்றால், மழைக்காலம் தொடங்குவதால், அகழாய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டு, குழிகள் அனைத்தும் மூடப்பட்டு, ஆவணமாக்கல் பணிகள் மட்டுமே நடைபெறும்.