சிவகங்கை: மானாமதுரை அருகேவுள்ள கீழடி, அகரம், மணலூர், கொந்தகை ஆகிய இடங்களில் இதுவரை ஆறு கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுள்ளன. தற்போது 7ஆம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன.
இந்நிலையில் அகரத்தில் அகழாய்வின்போது 8 அடி ஆழத்தில் புதிதாக மேலும் ஒரு உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அகழாய்வுப் பண்ணும்பட்சத்தில் அதன் ஆழமும், அகலமும் அதன் பயன்பாடுகள் தெரியவரும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
உறைகிணறு கண்டுபிடிப்பு