மதுரை: தல்லாகுளம் கமலா 2ஆவது தெருவை சேர்ந்த கிருஷ்ணாராம் தனது வளர்ப்பு மகள் நிவேதாவுடன் வசித்து வந்தார். சில தினங்களுக்கு முன் வளர்ப்பு தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. இதனால் நிவேதா தனது காதலருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த முதியவர் கிருஷ்ணாராம் மர்ம நபர்களால் நேற்று காலை படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து கொலை நடந்த வீட்டிற்கு தல்லாகுளம் சரக காவல் உதவி ஆணையர் சுரேஷ் தலைமையிலான காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.