தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'மதுரை எய்ம்ஸில் இந்தாண்டு மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும்' - MP Venkatesan

'மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ், மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்திற்கும் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும்' என்று மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

'மதுரை எய்ம்ஸில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும்' - எம்பி வெங்கடேசன்
'மதுரை எய்ம்ஸில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும்' - எம்பி வெங்கடேசன்

By

Published : Jun 26, 2021, 6:28 AM IST

மதுரை சர்வேயர் காலனி பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான நல உதவிகள் வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில் மதுரை மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் கலந்துகொண்டு உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளரிடம் அவர் கூறியபோது, "இந்தியாவில் கரோனா இரண்டாவது அலையால் மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள், கர்ப்பிணிகள் போன்றோர் குறித்து நேற்று முன்தினம் (ஜூன் 24) நாடாளுமன்ற நிலைக்குழு விவாதத்தில் விவாதிக்கப்பட்டது.

கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி எது?

இந்தக் காலத்தில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிக அளவில் விடுபட்டுள்ளது. இது குறித்து சரியான புள்ளிவிவரங்கள் அரசிடம் இல்லை. குறிப்பாக 'ஒன்றிய அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்' என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், எந்த மாநிலத்திலும் இது குறித்த புள்ளி விவரங்களைப் பெறவில்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையில் மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள், மாணவர்களுடைய உலகம் முழுவதுமாக மாறிப்போய் உள்ளது.

இது குறித்து ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டுசெல்ல விரும்புகிறேன். இந்தியா முழுவதும் 50 லட்சத்திற்கும் அதிகமான கருவுற்ற தாய்மார்களுக்குத் தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களுக்கு என்ன மாதிரியான ஊசி செலுத்துவது என்று ஒன்றிய அரசு உடனடியாக முடிவெடுக்க வேண்டும்.

கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி எது?

எய்ம்ஸ் மருத்துவமனை

நேற்று (ஜூன் 24) டெல்லியிலிருந்து புறப்படும்போது சுகாதாரத் துறை அமைச்சரைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தேன். இந்தாண்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட வேண்டும். தற்போது பொறுப்பு அலுவலராக ஜிப்மர் மருத்துவமனையைச் சேர்ந்த அலுவலர்கள் இருப்பதால் ஒருவேளை அங்கு அலுவலகம் இருக்கலாம்.

ஆனால், நிர்வாக அலுவலகம் மதுரையில்தான் இருக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்தியிருக்கிறோம். அதேபோல இந்தாண்டு மாணவர் சேர்க்கையும் நடைபெற வேண்டும். இது குறித்து மாநில அரசிடம் தெரிவித்துள்ளோம்.

அப்படி சேர்க்கை தொடங்கும்போது தற்காலிகமாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பழைய கட்டடத்தில் தொடங்க அனுமதிக்க வேண்டுமென தெரிவித்துள்ளோம். அதேபோல ஒன்றிய உரம் மற்றும் ரசாயன துறை அமைச்சர் சதானந்த கவுடாவை நானும் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூரும் சந்தித்தோம்.

அதில் மதுரை மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்திற்கும் இந்தாண்டு மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். அதற்கு மதுரை மாவட்ட நிர்வாகம் 116 ஏக்கர் இடம் வழங்கியுள்ளது. மேலும், ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக எய்ம்ஸ், மதுரை மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்திற்கு சேர்க்கை நடைபெறும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details