சென்னையைச் சேர்ந்த ஸ்ரீதரன், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல்செய்திருந்தார். அந்த மனுவில், "கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் புகழ்பெற்ற ஒன்றாக உள்ளது.
ஆதிகேசவ பெருமாள் கோயிலில் 2015ஆம் ஆண்டு கோயில் மறுசீரமைப்புப் பணிகள் தொடங்கிய நிலையில் அங்குள்ள சுவர்கள், தூண்கள், கோயில் கோபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முரள் பெயிண்ட் அடிக்கப்பட்டுவருகிறது.
இந்தப் பெயிண்ட் தரமற்ற இருப்பதாகப் பக்தர்கள் புகார் அளித்துள்ளனர். பழமையான திருக்கோயில்களில் பெயிண்ட் பச்சிலைகள் சேர்க்கப்பட்டு பயன்படுத்தப்படுவது வழக்கமாக உள்ள நிலையில் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் அதுபோல செய்யப்படாமல் பழமையான தூண்கள், கோபுரங்களில் பெயிண்ட் அடிக்கப்பட்டுவருவதால் அதன் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.