மதுரை பழங்காநத்தம் அருகே தனியார் உடற்பயிற்சி மையம் ஒன்று இயங்கிவருகிறது. இங்கு நாள்தோறும் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உடற்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். புதிகாக திறக்கப்பட்ட உடற்பயிற்சி மையம் என்பதால், இளைஞர்கள் இங்கே ஆர்வத்துடன் வருகை புரிகின்றனர்.
இப்புதிய பயிற்சிக் கூடத்தில் அப்பகுதியைச் சேர்ந்த விஷ்ணு என்ற இளைஞர் இன்று (ஜூன் 7) காலை 8:30 மணியளவில் பயிற்சி மேற்கொள்ள வந்துள்ளார். படிப்படியாக உடற்பயிற்சியை மேற்கொண்டவர் அதிக சுமை உள்ள பளு தூக்கியை தூக்க முயன்றபோது திடீரென சுருண்டு விழுந்து உள்ளார்.