தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 5, 2020, 6:25 PM IST

ETV Bharat / city

ஒரே நாளில் கரோனாவிலிருந்து 40 பேர் குணமடைந்தனர்

மதுரை: கரோனா தொற்று காரணமாக மதுரை கரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 40 பேர், இன்று பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.

Madurai Rajaji hospital
Madurai Rajaji hospital

மதுரை அரசு இராசாசி மருத்துவமனை வளாகத்தில் கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனை இயங்கிவருகிறது. மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த பலர், இங்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்த மருத்துவமனையில் நேற்று வரை 283 பேர் சிகிச்சை பெற்றுவந்தனர். அவர்களில் 193 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று ஒரே நாளில் சிகிச்சை பெற்றுவந்த 87 பேரில் 40 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 47 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க: திருவண்ணாமலையில் ஒரே நாளில் 13 பேருக்கு கரோனா!

ABOUT THE AUTHOR

...view details