தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கர்நாடக மதுப்பாட்டில்கள் பறிமுதல்: பெண் கைது - மதுப்பாட்டில்கள் கடத்திய பெண் கைது

ஈரோடு : கர்நாடக மாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்ட மதுப்பாட்டில்கள் பறிமுதல் செய்தது தொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கர்நாடக மதுப்பாட்டில்கள் பறிமுதல்: பெண் கைது
கர்நாடக மதுப்பாட்டில்கள் பறிமுதல்: பெண் கைது

By

Published : Jun 12, 2021, 10:41 PM IST

Updated : Jun 12, 2021, 11:02 PM IST

ஈரோடு மாவட்டத்தில் கரானா பரவல் குறையாத நிலையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் கர்நாடகத்திலிருந்து காய்கறி வாகனங்கள் மூலம் மதுபானங்கள் கடத்தி வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையடுத்து சத்தியமங்கலம் காவல் துறையினர் கோட்டுவீராம்பாளையத்தில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த சிவப்பிரகாஷ் என்பவரை பிடித்து விசாரித்துபோது அவரிடமிருந்து 16 கர்நாடக மது பாக்கெட்டுகள் கடத்தி வந்தது தெரியவந்தது.

அவர் அளித்த வாக்குமூலத்தின்பேரில் காய்கறி வியாபாரி நந்தினி என்பவர் பிக் அப் வேனில் மதுபாட்டிகள் கடத்துவதாக தெரிவித்தார். இதையடுத்து நந்தினியின் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த பிக் அப் வேனை சோதனையிட்டபோது 105 பாட்டில்கள் பதுக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மதுபாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர். இதனையடுத்து பண்ணாரி மற்றும் ஆசனூர் சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது.

இதையும் படிங்க:மின்வேலி அமைக்கும் விவசாயிகள் மீது நடவடிக்கை!

Last Updated : Jun 12, 2021, 11:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details