ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புதுப்பீர்கடவு வனப்பகுதியில் செம்மலை ஆண்டவர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சென்று வழிபடுவது வழக்கம்.
இந்நிலையில், இன்று(ஜன.28) வழக்கம்போல் பக்தர்கள் கோயிலுக்கு செல்வதற்காக வந்தபோது செம்மலை ஆண்டவர் கோயில் மலை அடிவார வனப்பகுதியில் துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படை காவல்துறையினர், வனத்துறையினர் பக்தர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
யானைகள் நடமாட்டம் உள்ள காட்டுப்பகுதி என்பதால் மாலையணிந்த, காவடி எடுத்து செல்லும் பக்தர்களுக்கு மட்டுமே கோயிலுக்கு செல்ல அனுமதி உள்ளதாகவும் மற்ற பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி இல்லை என கூறியதால் பக்தர்கள் மலை அடிவாரத்தில் காத்து கிடக்கின்றனர்.