ஈரோடு: மத்தியஅரசின் தனியார் மயம், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டில் 12 தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
குறிப்பாக அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க ஓட்டுநர்கள், நடத்துனர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் ஈரோடு மாவட்டத்தில் அரசு பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் தமிழகம் கர்நாடக இடையே பேருந்து சேவை பாதிக்கப்பட்டது.
தனியார் பேருந்துகள் மட்டுமே இயங்குகின்றன. பிரசித்தி பெற்ற பண்ணாரிமாரியம்மன் கோவிலில் இன்று குண்டம் மறுபூஜை என்பதால் ஆயிரக்கண்ககான பக்தர்கள் சத்தியமங்கலம் வந்து பண்ணாரி செல்வார்கள்.