தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 15, 2022, 3:40 PM IST

ETV Bharat / city

விபத்தில் நாய்க்குட்டி பலி - வாகன ஓட்டிகளை நெகிழ வைத்த தாய் நாயின் செயல்!

சத்தியமங்கலத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நாய்க்குட்டி உயிரிழந்ததையடுத்து, அவ்வழியே சென்ற வாகனங்களை பார்த்து குரைத்த தாய் நாயின் பாசம் காண்போரை நெகிழ வைத்தது.

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் குட்டிநாய் பலி
அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் குட்டிநாய் பலி

ஈரோடு: சத்தியமங்கலம் நகராட்சி வாரச்சந்தையில் தெருநாய்கள் அதிகளவில் உள்ளன. சந்தையில் கிடைக்கும் பொருட்களை சாப்பிட்டு அங்கு சுற்றித்திரிகின்றன. இந்நிலையில் அதிகாலை அத்தாணி சாலையில் தாயுடன் சென்ற நாய்க்குட்டி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், நாய்க்குட்டி உயிரிழந்தது.

அப்போது விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தாய் நாய் துரத்தியது. பின்னர் நாய்க்குட்டியின் முகத்தை வேதனையுடன் முகர்ந்து பார்த்தது. அது உயிரிழந்தது தெரியவந்ததால் பாசத்தில் குட்டியை பிரிய மனமில்லாமல் அங்கேயே நின்று குரைத்துக்கொண்டிருந்தது. சிறிது தூரம் போவதும் வருவதுமாக அதன்செயல் பாிதாபமாக இருந்தது.

அவ்வழியாக சென்ற வாகனங்களை பார்த்து குரைத்ததால் மற்ற நாய்களும் சேர்ந்து குரைத்தன. இறந்த நாய்க்குட்டியை பிரிய மனமில்லாமல் அங்கேயே இருந்த தாய் நாயின் பாசம், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளின் மனதை நெகிழவைத்தது.

விபத்தில் நாய்க்குட்டி பலி - வாகன ஓட்டிகளை நெகிழ வைத்த தாய் நாயின் செயல்!

இதையும் படிங்க:புதுச்சேரியில் தந்தை கண்முன்னே மகன் விபத்தில் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details