ஈரோடு மாவட்டம் புளியம்கோம்பை பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு 50க்கும் மேற்பட்ட விவசாயக் கூலித்தொழிலாளர்கள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு நடக்கமுடியாமல் அவதிப்பட்டனர். இந்த நோயின் தாக்கம் கம்பத்தராயன் புதூர், புளியங்கோம்பை ஆகிய பகுதிகளிலும் பரவியது. இது குறித்து நகராட்சி சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்நிலையில் நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார பணி மேற்கொண்டு குடிநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்தனர். இந்நிலையில், கொசுக்கள் மூலம் பரவும் இந்த நோய் பாதிப்பு குள்ளங்கரடு, ஜேஜே நகர், வரதம்பாளையம் பகுதி வரை பரவி வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 200ஆக உயர்ந்துள்ளது.