தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிறுமியின் கருமுட்டை விற்பனை வழக்கு - பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை! - பாதிக்கப்பட்ட சிறுமியிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை

சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்த வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுமியிடம் சுகாதாரத்துறை அலுவலர்கள் விசாரணை நடத்தினர். சிறுமியின் வாக்குமூலத்தை வைத்து, சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

சிறுமியின் கருமுட்டை விற்பனை வழக்கு
சிறுமியின் கருமுட்டை விற்பனை வழக்கு

By

Published : Jun 5, 2022, 7:17 PM IST

Updated : Jun 10, 2022, 5:02 PM IST

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண், தனக்கு 3 வயதில் பெண் குழந்தை இருந்தபோது கணவனை விட்டுப் பிரிந்து விட்டார். பின், வேறு ஒருவருடன் இரண்டாவதாக திருமணம் முடித்து வாழ்ந்து வந்துள்ளார். இதனிடையே இளம்பெண்ணின் மகள் 16 வயதினை எட்டியநிலையில், இரண்டாவது கணவர் அச்சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.இதற்கு தாயும் உடந்தையாக இருந்துள்ளார். இந்நிலையில் அந்த இளம்பெண், தனது இரண்டாவது கணவர் மற்றும் அவரது நண்பர்கள் மூலம் அச்சிறுமியின் பெயர் மற்றும் வயதை ஆதாரில் போலியான ஆவணங்கள் மூலம் தயாரித்துக் கொண்டு ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிறுமியின் கருமுட்டையை 8 முறைக்கு மேல் விற்பனை செய்து வந்துள்ளனர்.

இதற்கிடையே சிறுமியின் வளர்ப்புத்தந்தை, சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளார். இவர்களின் கொடுமை தாங்க முடியாமல் தவித்த சிறுமி இவர்களிடம் இருந்து தப்பித்து சேலத்தில் உள்ள நண்பர் மூலமாக, உறவினர் வீட்டுக்குச் சென்று, ஈரோடு சூரம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதனையடுத்து, இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்திய காவல் துறையினர் தாய் , அவரது இரண்டாவது கணவர்,மற்றுமொரு இடைத்தரகர் பெண், ஆவணங்களை தயாரித்து கொடுத்த நபர் ஆகிய 4 பேரையும் போக்சோ சட்டம், போலியான ஆவணங்களைத் தயாரித்துக்கொடுத்தல் எனப் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர்களிடம் கருமுட்டை பெற்ற மருத்துவமனைகள் விசாரணைக்கு ஆஜராக கோரி காவல் துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர். இதற்கிடையே சென்னையைச் சேர்ந்த கமலக்கண்ணன், விஸ்வநாதன் தலைமையிலான 6 பேர் கொண்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் பாதிக்கப்பட்ட சிறுமி தங்க வைக்கப்பட்டுள்ள R.N.புதூர் சீர்திருத்த இல்லத்திற்குச் சென்று, சிறுமியிடம் விசாரணை நடத்தினர். சிறுமியிடம் பெற்ற வாக்குமூலத்தை கொண்டு சம்மந்தப்பட்ட மருத்துவமனைகளில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம்... மருத்துவமனைகளுக்கு சம்மன்

Last Updated : Jun 10, 2022, 5:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details