ஈரோடு மாவட்டம் புதுமை காலனி பகுதியில் உள்ள பழுதடைந்த பழைய கட்டடங்களை இடித்து விட்டு, புதிதாக 464க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை குடியிருப்புவாசிகளிடம் ஒப்படைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குடியிருப்புகள் ஒதுக்கும் விவகாரம் - எம்எல்ஏக்களுடன் வாக்குவாதம் செய்த பொதுமக்கள்! - two mla' s blocked
ஈரோடு: குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை வழங்க பயனாளிகளிடம் கூடுதலாக பணம் கேட்பதாக எழுந்த புகாரில், இரண்டு எம்எல்ஏக்களை சுற்றிவளைத்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
![குடியிருப்புகள் ஒதுக்கும் விவகாரம் - எம்எல்ஏக்களுடன் வாக்குவாதம் செய்த பொதுமக்கள்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4177954-361-4177954-1566224463130.jpg)
house issue
இந்நிலையில், அரசு அலுவலர்களும், ஆளும்கட்சி பிரமுகர்களும் தமிழ்நாடு அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதலாக பணம் கேட்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர்.
இரண்டு எம்.எல்.ஏ.க்களை சுற்றி வளைத்து பொதுமக்கள்
இதனைத் தொடர்ந்து, அரசுப் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ தென்னரசு, மேற்கு தொகுதி எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோரை நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Last Updated : Aug 19, 2019, 8:04 PM IST