தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 22, 2022, 8:41 PM IST

ETV Bharat / city

குடியிருப்புகளுக்கு பாதகம் ஏற்படுத்தும் பாதாள குழி...தடுத்து நிறுத்த மக்கள் கோரிக்கை

தனிநபர் தோண்டும் பிரம்மாண்ட பாதாள குழியால் குடியிருப்புகள் சேதமடைவதோடு உயிருக்கும் ஆபத்து இருப்பதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

குடியிருப்புகளுக்கு பாதகம் ஏற்படுத்தும் பாதாள குழி...தடுத்து நிறுத்த மக்கள் கோரிக்கை
குடியிருப்புகளுக்கு பாதகம் ஏற்படுத்தும் பாதாள குழி...தடுத்து நிறுத்த மக்கள் கோரிக்கை

ஈரோடு:கொடுமுடி அருகே உள்ள அஞ்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி அம்மா நகர். இங்கு நெசவாளர்களுக்காக கொடுக்கப்பட்ட குடியிருப்புக்குகளுக்கு அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்தநிலத்தில் பிரம்மாண்டமாக கால்வாய் போல் பாதாள குழி தோண்டபப்டுகிறது.

வீடுகளுக்கு அருகில் இவ்வளவு பெரிய குழி தோண்டி வருவதால் வீடுகள் மண்ணில் புதையும் அபாயம் ஏற்படும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளார்கள். நொய்யல் ஆற்றுப் பாலம் அருகே ஒத்தப்பனை என்ற இடத்தில் பாதாள குழி தோண்டி வரப்படுகிறது.

குடியிருப்புகளுக்கு பாதகம் ஏற்படுத்தும் பாதாள குழி...தடுத்து நிறுத்த மக்கள் கோரிக்கை

இதனால் ஆற்று வெள்ளம் மற்றும் மழை வெள்ளம் ஏதேனும் ஏற்பட்டால் மண் சரிவு ஏற்பட்டு குடியிருப்புகள் மண்ணில் புதையும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த பிரம்மாண்டமான பாதகம் விளைவிக்க கூடிய பாதாள குழியால் குடியிருப்புகல் மட்டுமின்றி உயிருக்கும் ஆபத்து உள்ளது.

இதில் உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பாதாள குழி தோன்டுவதை தடுத்து நிறுத்தி பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

இதையும் படிங்க:ஓபிஎஸ்க்கு பெருகும் ஆதரவு... திடீர் போஸ்டரால் பரபரப்பு

ABOUT THE AUTHOR

...view details