தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஈரோடு அருகே டெம்போ கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு - கிடா விருந்துக்கு சென்று திரும்பிய டெம்போ

ஈரோடு அருகே தாண்டாம்பாளையத்தில் கிடா விருந்துக்கு சென்று திரும்பிய 16 பேர் பயணித்த டெம்போ விபத்துக்குள்ளானதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Etv Bharatf
Etv Bharat f

By

Published : Sep 4, 2022, 7:40 PM IST

ஈரோடு:சத்தியமங்கலம் அருகே புதுக்கொத்துக்காட்டையைச் சேர்ந்த 16 கட்டிடத்தொழிலாளர்கள் டெம்போவில் ராஜன்நகரில் புதுமனை புகுவிழாயையொட்டி நடந்த கிடா விருந்துக்கு சென்றனர். விருந்துக்கு பின் அவர்கள் மீண்டும் சத்தியமங்கலம் நோக்கி திரும்பியபோது, தாண்டாம்பாளையம் என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து சாலையோரம் நின்ற ஆம்னி மீது மோதி நின்றது.

இந்த விபத்தில் லாரியில் இருந்த 17 பேரும் பலத்த காயமடைந்தனர். டெம்போவுக்கு அடியில் சிக்கிக்கொண்ட கவிதா என்ற பெண் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் 10 பெண்கள் உட்பட 16 பேரும் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து சிலரை மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

ABOUT THE AUTHOR

...view details