ஈரோடு மாவட்டம் சம்பத் நகரில் இயங்கி வரும் கிட்னிகேர் என்னும் தனியார் மருத்துவமனையின் பெயரில், சிறுநீரக தானம் செய்பவர்களுக்கு மூன்று கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும், இதற்கான பதிவு கட்டணமாக 15 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் அடையாளம் தெரியாத நபர்கள் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் மூலம் போலியான பார்ஃவடு குறுஞ்செய்திகளை பரப்பியுள்ளனர். இதனை நம்பி ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள், அவர்கள் குறிப்பிட்டிருந்த வங்கி கணக்கில் பணத்தை செலுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக மருத்துவமனைக்கு தொலைபேசி வாயிலாக மக்கள் தொடர்புகொண்டு கேட்டுள்ளனர். இதன் மூலம் மருத்துவமனை இயக்குநர் பிரபாகருக்கு இந்த மோசடி குறித்து தெரியவந்தததையடுத்து, அவர் ஈரோடு வடக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தாா்.