தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

2 நாட்களாக காணாமல் போன மூதாட்டி : ஆற்றில் சடலமாக மீட்பு - Erode District Satyamangalam

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே 2 நாட்களாக காணாமல் போன மூதாட்டி இன்று பவானி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

2 நாட்களாக காணாமல் போன மூதாட்டி : ஆற்றில் சடலமாக மீட்பு
2 நாட்களாக காணாமல் போன மூதாட்டி : ஆற்றில் சடலமாக மீட்பு

By

Published : Jan 25, 2021, 12:26 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கெம்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கிட்டம்மாள், 75 வயது மூதாட்டியான இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு காணாமல் போனதையடுத்து அவரது குடும்பத்தினர் சுற்றுவட்டார பகுதி மற்றும் உறவினர்கள் வீட்டில் தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று சத்தியமங்கலம் சித்தி விநாயகர் கோயில் படித்துறை அருகே பவானி ஆற்றில் துணி துவைத்துக் கொண்டிருந்த பெண்கள் வயதான மூதாட்டியின் உடல் நீரில் மிதந்ததை கண்டதும் சத்தியமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற சத்தியமங்கலம் காவல் துறையினர் 2 நாட்களுக்கு முன்பு காணாமல் போன வெங்கிட்டம்மாளின் சடலம் என்பது தெரிய வந்ததையடுத்து அவரது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து காவல் துறையினர் பவானி ஆற்றில் மிதந்த சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:காணாமல் போன 12 வயது சிறுவன் : கழிவுநீர் தொட்டியிலிருந்து சடலமாக மீட்பு

ABOUT THE AUTHOR

...view details