தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தாளவாடியில் கன்னட நடிகர் சிவராஜ்குமாரை பார்ப்பதற்கு குவிந்த ரசிகர்கள் - Kannada actor Shivarajkumar Came home to the farm Talavadi

தாளவாடி பண்ணை வீட்டுக்கு வந்த கன்னட நடிகர் சிவராஜ்குமாரை பார்ப்பதற்கு ரசிகர்கள் குவிந்தனர்.

கன்னட நடிகர்  சிவராஜ்குமார்
கன்னட நடிகர் சிவராஜ்குமார்

By

Published : Jun 25, 2022, 10:21 PM IST

ஈரோடு: தமிழ்நாடு கர்நாடகா எல்லையில் அமைந்துள்ள தாளவாடியில் மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் பண்ணை வீடு உள்ளது. நடிகர் ராஜ்குமார் இறந்த பிறகு அவரது மகன்கள் சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார் ஆகியோர் பண்ணை நிலம் மற்றும் விவசாயத்தை கவனித்து வந்தனர்.

அண்மையில் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் சிவராஜ்குமார் அவ்வவ்போது பண்ணை வீட்டுக்கு வந்த நிர்வாகித்து வந்தார். இந்நிலையில் சிவராஜ்குமார், தனது நண்பரான பிரபல கன்னட நடிகர் டாலி தனஞ்செய்னுடன் இன்று தாளவாடி வந்தார். இரு நடிகர்கள் தாளவாடி வருவதை அறிந்த மைசூர், சாம்ராஜ்நகர், கொள்ளேகால், குண்டல்பேட் ரசிகர்கள் தாளவாடியில் திரண்டனர்.

கன்னட நடிகர் சிவராஜ்குமார்

ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த தாளவாடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நீண்ட வரிசையாக அணிவகுத்து நின்ற ரசிகர்களுடன் சிவராஜ்குமார், டாலி தனஞ்செய் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து நடிகர் ராஜ்குமார் வாழ்ந்த பாரம்பரிய ஓட்டு வீட்டுக்கு சென்று ராஜ்குமார் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்பிறகு தாளவாடி பஸ் நிலையம் வந்து ரசிகர்களை பார்தது உற்சாகப்படுத்திய அவர்கள் காரில் புறப்பட்டு பெங்களுரு சென்றனர்.

இதையும் படிங்க:வீடியோ: ஓபிஎஸ் புகைப்படத்தை கிழித்து எறிந்த ஈபிஎஸ் ஆதரவாளர்கள்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details