தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பலத்த மழை: மலை அருவிகளில் ஆர்ப்பரித்தும் கொட்டும் மழைநீர்

ஈரோடு: சத்தியமங்கலம் அருகேயுள்ள பெய்த பலத்த மழை காரணமாக அருவிகளில் மழைநீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

Heavy rainfall in erode
Heavy rainfall in erode

By

Published : May 8, 2021, 12:57 PM IST

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் கடம்பூர் மலைப்பகுதியில் கோடை வெப்பத்தால் வனக்குட்டைள், ஏரிகள் வறண்டு காணப்பட்டது.

வெயில் வாட்டி வந்த நிலையில் இன்று (மே. 7) குன்றி, மல்லியம்துர்க்கம் மலைப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் மழை பெய்ததால் மலைஅருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது.

சத்தியமங்கலம் கடம்பூர் மலைப்பாதையில் பாறைகளுக்கு இடையே வழிந்தோடும் மழைநீரைக் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

நீர்வீழ்ச்சிகளில் கொட்டிய மழைநீர் கடம்பூர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இந்த அணை நீர் பள்ளங்களில் வழியாக பெரும்பள்ளம் அணைக்கு வந்தது. இதனால் பெரும்பள்ளம் அணையின் நீர் மட்டம் மெல்ல மெல் உயருகிறது.

கடம்பூர் மலைப்பகுதியில் பெய்த மழையால் ஏரிகள், வனக்குட்டைகளில் நீர் நிரம்பியது. வனப்பகுதியில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

ABOUT THE AUTHOR

...view details