ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சிறுத்தை, புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இதனால் வனத்தையொட்டிள்ள கிராமங்களில் புலி புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வருகிறது.
இந்நிலையில் சில வாரங்களாக வனத்தையொட்டியுள்ள சேஷன்நகர் கிராமத்தில் விவசாயிகள் பராமரித்து வந்த 4 மாடுகள், 3 ஆடுகள், 2 காவல் நாய்களை கடித்துக் கொன்றுள்ளது. புலியின் அச்சுறுத்தலால் பகலில் விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் சிரமத்துள்ளாகியுள்ளனர்.
இதனால் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் அல்லது வனப்பகுதியில் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளின் கோரிக்கையின்படி வனத்துறையினர் ட்ரோன் மூலம் புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். அதன் நடமாடும் பாதையில் 4 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.