ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் கடம்பூர் மலைப்பகுதி பனைமரத்து காட்டை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தில் வாழை சாகுபடி செய்துள்ளார். வாழை நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது.
இவரது தோட்டத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் அருகே சென்றாலும் மின்சாரம் தாக்கும் அபாயம் உள்ளதாகவும், இவரது தோட்டத்து வழியாக செல்லும் மின் கம்பிகள் மிகவும் தாழ்வான அமைந்துள்ளதாகவும் ஐந்தடி தூரத்தில் கைக்கெட்டும் அளவில் இருப்பதால் யானைகள் மற்றும் பிற விலங்குகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
மேலும் இங்குள்ள டிரான்ஸ்பார்மர் அமைந்துள்ள இடத்திற்கு கீழ் மின்சாரம் பாய்வதால் மனிதர்கள், விலங்குகள் செல்லும்போது மின்சாரம் தாக்க வாய்ப்பு உள்ளது. தாழ்வாக உள்ள இந்த மின் கம்பியால் வாழை மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது.