தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'எங்கள் உயிருக்குப் பாதுகாப்பில்லை' - லாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்! - Erode people protest

ஈரோடு: கூடுதல் பாரம் ஏற்றி கொண்டு அதிவேகத்தில் வரும் லாரிகளால் விபத்து ஏற்படுவதாகக் கூறி, 15 லாரிகளை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்

By

Published : Sep 27, 2019, 8:46 AM IST

ஈரோடு மாவட்டம் கொடுமுடியை அடுத்த ராசாம்பாளையம் கிராமத்தின் வழியாக அனுமதியின்றி நீர் எடுத்துச் செல்லும் லாரிகளும், அதிக பாரம் ஏற்றிக் கொண்டு வரும் எம் சாண்ட் லாரிகளும் அடிக்கடி விபத்தை ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் அடிக்கடி புகார் கூறுகின்றனர்.

மேலும், இந்த லாரிகளால் தார்ச் சாலை பெயர்ந்து, மண் சாலையாக மாறியதுடன், மழையால் சேரும் சகதியுமாக மாறி விட்டதாகப் புகார் கூறுகின்றனர். இது குறித்துப் பல முறை அலுவலர்களிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், எம் சாண்ட் மணல் லாரி ஒன்று முதியவர் மீது மோதியதில் அவர் காயமடைந்தார்.

லாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்

இதனால் ஆவேசமடைந்த கிராம மக்கள் அந்த வழியாக வந்த 15 லாரிகளைச் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை அலுவலர்களும், காவல்துறையினரும் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், கூடுதல் பாரம் ஏற்றிய லாரிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. இதனையடுத்து கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க:

'பட்டா கொடுக்கலனா எங்க வாக்காளர் அட்டையை வாங்கிக்கோங்க’ - கிராம மக்கள்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details