ஈரோட்டில் 16 வயது சிறுமியின் தாய் தனது இரண்டாவது கணவருடன் சேர்ந்து, சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் சிறுமியின் தாயார் கார்த்திகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), அவரது இரண்டாவது கணவர் ஹரிஹரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
இடைத்தரகர் கேகிலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), சிறுமியில் வயதை அதிகரித்துக் காட்ட போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த ஜோஸ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகிய நான்கு பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இதனிடையே காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட சிறுமியிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சிறுமியிடம் கருமுட்டை பெற்ற ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூரில் உள்ள மருத்துவமனைகளிலும் சுகாதாரத்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.