ஈரோடு ஆர்.டி.ஓ.அலுவலகத்தில் நேற்று (மே 13) ஈரோடு மாவட்ட சுமை பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் தங்கவேல் தலைமையில் ஏராளமான சுமை தூக்கும் தொழிலாளர்கள் திரண்டு வந்து தங்களது கோரிக்கை அடங்கிய மனுக்களை வழங்கினர். அந்த மனுவில், 'ஈரோடு குட்ஸ் டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களில் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளர்களின், கூலி ஒப்பந்தம் முடிவுற்று 3 ஆண்டுகள் முடிவடைந்து விட்டது. இதனால் கூலி உயர்வு கோரி சங்கம் சார்பாக போராடிய போது, கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால், இதுவரை எந்த ஒரு கூலி உயர்வும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் கூலி உயர்வு குறித்து பேச சம்பந்தபட்ட அலுவலர்கள் முன்வர வேண்டும் என சி.ஐ.டி.யு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால், குட்ஸ் டிரான்ஸ்போர்ட் தரப்பில் கூலி உயர்வு குறித்து பேச முன்வரவில்லை. மாறாக தொழிலாளர்களை வேலையிலிருந்து தூக்கி விடுவோம் என மிரட்டும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள்.