ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இங்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரே மாதத்தில் மூன்று யானைகள் நோயால் உயிரிழந்தன.
இந்நிலையில், கடம்பூர் வனத்துறையினர் குரும்பூர் காப்புக்காட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 9 வயதுள்ள ஆண்யானை உயிரிழந்தது தெரியவந்தது.