ஈரோடு: சத்தியமங்கலத்தில் ரீது தொண்டு நிறுவனம் சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு நிதியுதவி, தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவுக்கு தலைமை வகித்த வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி, தூய்மைப் பணியாளர்களுக்கு நிதியுதவிகளை வழங்கினார். அப்போது, தூய்மைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் பணி நிரந்தரம், சம்பள உயர்வு கேட்டு மனு அளிக்கப்பட்டது.
தொலை நோக்குத் திட்டம்
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சு.முத்துச்சாமி, ”முதலமைச்சரின் அணுகுமுறை நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தின் படியாக உள்ளது. மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை துறைவாரியாகக் கேட்டு பெற்று, தீர்வும் அளிக்கிறார். திமுக தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை தற்போது அலுவலர்கள் நிறைவேற்றும்போது, திமுக வாக்குறுதி என்றால் அலுவலர்களுக்கு நெருடல் ஏற்படும் என்பதற்காக, முதலமைச்சர் "தொலை நோக்குத் திட்டம்" என்று பெயரை மாற்றி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்.