தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஈரோடு காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஈரோடு காவிரி கரையோர மக்களுக்கு வருவாய் துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

By

Published : Oct 15, 2022, 10:59 PM IST

ஈரோடு காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
ஈரோடு காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஈரோடு: காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்தானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் கூடுதலாக 1 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீரானது திறக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி கரையோர மக்களுக்கு வருவாய் வட்டாட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமையிலான வருவாய் துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர். மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தினர்.

இதையும் படிங்க:கோவை எம்ஜிஆர் சந்தையை சூழ்ந்த மழை நீர்! - அவதியடைந்த மக்கள்

ABOUT THE AUTHOR

...view details