தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’செம்மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும்’  - ஈரோடு செங்கல் சூளை பணியாளர்கள் - Erode district Sathyamangalam

சத்தியமங்கலம் அருகே செங்கற்கள் தயாரிக்கும் தொழில் சூடுபிடித்துள்ள நிலையில், உற்பத்திக்குத் தேவையான செம்மண் எடுக்க அரசு விதிகளுக்கு உள்பட்டு மாவட்ட நிர்வாகம் அளிக்க வேண்டும் என பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மழையால் பாதிக்கப்பட்ட செங்கல் உற்பத்தி மீண்டும் தொடக்கம்
மழையால் பாதிக்கப்பட்ட செங்கல் உற்பத்தி மீண்டும் தொடக்கம்

By

Published : Aug 23, 2021, 6:44 AM IST

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே உள்ள இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் 200க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன.

முன்னதாக தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வந்ததை அடுத்து இந்த செங்கல் சூளைகள் முடங்கின. தற்போது இப்பகுதிகளில் பெய்யும் மழையின் அளவு குறைந்துள்ளதால் செங்கற்கள் தயாரிக்கும் தொழில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அங்கு வேலை செய்பவர்கள் தெரிவித்தபோது, "இங்கு தயாரிக்கப்படும் செங்கற்கள் சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி, பவானிசாகர், கோபிச்செட்டிப்பாளையம், நம்பியூர் உள்ளிட்ட ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

கடந்த சில வாரங்களாக சத்தியமங்கலம், பவானிசாகர் வட்டாரத்தில் தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்தது. தற்போது மழை குறைந்துள்ளதால் மீண்டும் செங்கல் சூளையில் வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

சத்தியமங்கலம் அருகே மழையால் பாதிக்கப்பட்ட செங்கல் உற்பத்தி மீண்டும் தொடக்கம்

மேலும், கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் செங்கல் தொழிலை நம்பியுள்ள இரண்டாயிரம் தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்குச் சென்றனர். கரோனா பரவல் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் மாலை 5 மணிக்குமேல் கடைகள் அடைக்கப்படுகின்றன.

இந்நிலையில், தற்போது கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் செங்கல் விற்பனை மீண்டும் சூடு பிடித்துள்ளது.

செங்கல் சூளைகளில் உற்பத்தி செய்யத் தேவையான செம்மண் எடுக்க அரசு விதிகளுக்கு உள்பட்டு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கினால், இத்தொழிலை நம்பியுள்ள செங்கல் தொழிலாளர்களின் வாழ்க்கை மேம்படும்" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 'ஓடும் காரில் பற்றிய தீ - ஓட்டுநர் உயிரிழப்பு'

ABOUT THE AUTHOR

...view details