கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் அருகே இயங்கி வரும் தென்னை நார் தொழிற்சாலைக்கு 16 வயது சிறுமி தினசரி வேலைக்குச் சென்று வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் சுற்றுலா வந்த இளைஞர் ஒருவர் சிறுமியை சந்தித்துள்ளார்.
பின்னர், இருவரும் செல்போனில் பேசி வந்த நிலையில் அது காதலாக மாறியது. தொடர்ந்து, இளைஞர், சிறுமியிடம் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர்.
காவல் நிலையத்தில் புகார்
இது குறித்து வீட்டில் கூறாமல் இளைஞருடன் சிறுமி சென்றார். இந்நிலையில், சிறுமி வீட்டில் இல்லாததைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் கோட்டூர் காவல் நிலையத்தில் மகளை காணவில்லை என புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் சிறுமி காதலித்து வந்தது தெரியவந்தது.