தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 2, 2022, 7:48 PM IST

ETV Bharat / city

தொடர் விடுமுறை: ஆழியார் அணைப் பகுதியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணையில் பள்ளிகளுக்குத் தொடர் விடுமுறையால் ஆழியார் அணையில் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

ஆழியார் அணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
ஆழியார் அணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கோவை: பள்ளிகளுக்கு இன்று முதல் 12 நாட்கள் காலாண்டு விடுமுறை என்பதால் சுற்றுலா தலங்களில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது.

பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைப்பூங்கா, வண்ணத்துப்பூச்சி பூங்கா, கவியருவி உள்ளிட்ட இடங்களுக்கு கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம்.

இந்நிலையில் பள்ளிகளுக்குத்தொடர் விடுமுறை மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை ஆகிய விடுமுறை நாட்கள் என்பதால் அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் திரண்டதால் ஆழியார் அணைப்பூங்கா மற்றும் கவியருவி பகுதிகளில் நீண்ட நேரம் வரிசையில் சுற்றுலாப் பயணிகள் நின்றனர். இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

ஆழியார் அணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

பின்னர் இதனை போக்குவரத்து காவல்துறையினரை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆழியார் பகுதியில் மக்கள் கூட்டம் படையெடுத்த வண்ணம் உள்ளதால் அங்குள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:காலாண்டு விடுமுறை... குமரி கடலில் குவிந்த மக்கள்...

ABOUT THE AUTHOR

...view details