தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நீட் பயிற்சி மையத்தில் மாணவி தற்கொலை - கோவை

தனியார் நீட் பயிற்சி மையத்தில் பயின்று வந்த மாணவி, விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CBE
CBE

By

Published : Apr 2, 2022, 12:45 PM IST

கோவை மாவட்டம் கோவில்பாளையம் அடுத்துள்ள கொண்டயம்பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் நீட் பயிற்சி மையத்தில், 65 மாணவிகள் உள்பட 130 பேர் பயின்று வருகின்றனர்.

இந்த மையத்தில், கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த ஸ்வேதா(18) என்ற மாணவி, 2021ஆம் ஆண்டு முதல், பயிற்சி மையத்தின் விடுதியில் தங்கி படித்து வந்தார். ஸ்வேதாவும், அங்கு படிக்கும் யோகேஸ்வரன் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதையறிந்த பெற்றோர், இருவரும் பேசிக் கொள்ளக் கூடாது எனக் கண்டித்துள்ளனர். இதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம், யோகேஸ்வரனை படிக்க வேண்டாம் எனக் கூறி, அவரது பெற்றோர் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதனால் ஸ்வேதா மனமுடைந்திருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று காலை முதல் ஸ்வேதா உடல் நிலை சரியில்லாமலும், பயிற்சி வகுப்புக்கு செல்லாமலும் அறையிலேயே இருந்துள்ளார்.

அப்போது, தனது அறையிலேயே தற்கொலையால் உயிரிழந்தார். இதையடுத்து, ஸ்வேதாவின் உடலை காவலர்கள் உடற்கூறு பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கோவில்பாளையம் போலீசார், பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு எதேனும் காரணம் உள்ளதாக என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details