தமிழ்நாடு

tamil nadu

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி 2022: லோகோ ஸ்டிக்கரை ஒட்டிய பொள்ளாச்சி சார் ஆட்சியர்!

By

Published : Jul 16, 2022, 7:09 PM IST

பொள்ளாச்சி சார் ஆட்சியர், நகரில் உள்ள அரசுப்பேருந்துகள், ஷேர் ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இலச்சினை கொண்ட ஸ்டிக்கர்களை ஒட்டி விழிப்புணர்வு செய்தார்.

ஆட்சியர் விழிப்புணர்வு
ஆட்சியர் விழிப்புணர்வு

கோவை:சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் (Chess Olympiad) போட்டிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பள்ளி மாணவ மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

இதன்பொருட்டு கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ், செஸ் போட்டி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செஸ் போட்டி குறித்த இலச்சினை கொண்ட ஸ்டிக்கரை கேஸ் சிலிண்டர், ஆட்டோ, தனியார் மற்றும் அரசுப்பேருந்துகளில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் ஒட்டினார்.

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி 2022: லோகோ ஸ்டிக்கரை ஒட்டிய பொள்ளாச்சி சார் ஆட்சியர்!

இதில் சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வெங்கடாசலம், தாசில்தார் தணிகைவேல் மற்றும் அலுவலர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: தர்ப்பூசணியாலான செஸ் போர்டு; செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வுக்காக அசத்திய இளைஞர்!

ABOUT THE AUTHOR

...view details