தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வன உயிரின வாரத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி! - பொள்ளாச்சியில் வன உயிரின வார கொண்டாட்டம்

கோவை: பொள்ளாச்சி தனியார்ப் பள்ளியில் வனத்துறை சார்பில் வன உயிரின வார விழா நடைபெற்றது. அதில் ஏராளமான மாணவர்களுக்கு ஓவியம் உள்ளிட்டப் போட்டிகள் நடத்தப்பட்டன

school-students-participated-in-drawing-competition

By

Published : Sep 21, 2019, 11:40 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வருடந்தோறும் அக்டோபர் முதல் வாரத்தில் வன உயிரின வார விழா கொண்டாடப்படுவது வழக்கம். இதை முன்னிட்டு ஜமீன்ஊத்துக்குளி தனியார் பள்ளியில், வன விலங்குகள் குறித்து பள்ளி மாணவியர்களுக்கு ஓவிய, பேச்சு, கட்டுரை உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

பள்ளி மாணவர்கள் ஓவியப் போட்டி

இது குறித்து அந்த மாவட்ட வன அலுவலர் மாரிமுத்து கூறும் போது, "ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் வன விலங்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இடையேயான பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

அதில் வெற்றி பெறும் மாணவியர்களுக்கு வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி பிறந்த நாளை முன்னிட்டு டாப்சிலிப்பில் உள்ள பழங்குடியின மக்களின் உண்டு உறைவிடப் பள்ளியில் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

கோவை மாவட்ட வன அலுவலர் மாரிமுத்து பேட்டி

இதில் அந்த பழங்குடியின மக்களின் பாரம்பரியம் குறித்தும், டாப்சிலிப் சுற்றுலா மையம் குறித்தும் மாணவ, மாணவியர்களுக்கு தெரிவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வனத்துறையினருக்கு உதவியாக இருக்கும் ஊடகம் உள்ளிட்ட பல்வேறு துறையினருக்கும் பரிசுகள், சான்றிதழ் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:

ஓசோன் தினம் - அரியலூர் அரசுக் கல்லூரியில் விழிப்புணர்வு போட்டிகள்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details